தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

 நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj


Posts : 47
Join date : 2010-09-21

நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Empty
PostSubject: நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை    நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  EmptyWed Sep 22, 2010 7:40 pm

அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது. மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார்கள் மதனும், பாலாஜியும். இருவரின் முகத்திலும் பயத்தின் அடையாளங்கள் தெளிவாய் தெரிந்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜின் உள்ளே இருந்து தண்ணீரை எடுத்தான் பாலாஜி.

அப்படியேண்டா அடிச்ச? போய்ட்டான். இப்ப என்ன செய்ய?

நீயும்தானே அடிக்கலாம்னு வந்த.. அவனையெல்லாம் விடக்கூடாதுடா. எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல. ஆனா அவன் இப்படி போயிடுவான்னு நினைக்கல.

போச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. உன் மொபைல் கொடு. அண்ணன்கிட்ட சொல்லிடலாம்.
என்னடா?

மொபைல காணோம்டா.

அங்கேயே விட்டியாடா? லூசாடா நீ? மவனே வர்ற ஆத்திரத்துக்கு.. என்னும்போதே அவள் அப்படியொன்றும் அழகில்லை” என ஃப்ரிட்ஜுக்குள் இருந்து பாடியது. பெருமூச்சு விட்டபடி இதுக்க்குள்ள ஏண்டா வச்ச என்ற மதன் வந்த மெசெஜைப் படித்தான்.

நான் வைக்கலடா. நான் தண்ணிதான் எடுத்தேன். சத்யமா நான் வைக்கல.

”Plz forward this message to 10 persons in next 2 mins to avoid an accident”

இவனுங்கள… டேய். போலிஸ் கண்டுபுடிச்சிடுவாங்களா? உனக்கு அவன்கிட்ட இருந்து கடைசியா எப்ப ஃபோன் வந்துச்சு?

டேய். என் மெசெஜ் டோனும் அந்த பாட்டு கிடையாதுடா. ஃபோன நான் வைக்கலடா. எப்படி இந்த ஃப்ரிட்ஜுக்குள்ள வந்துச்சு?

இப்ப அதுவா முக்கியம் என்னும்போதே எந்த வித சத்தமமுமின்றி மிக அமைதியாக வெடித்து சிதறியது ஃப்ரிட்ஜ். அறை முழுவதும் குளிர்ந்த பாலும், காய்கறிகளும் தெறித்தன. அப்போதுதான் ஒரு கொலை செய்துவிட்டு பயந்து ஓடிவந்த மதனுக்கும், பாலாஜிக்கும் கிட்டத்தட்ட இதயம் நின்று போயிருந்தது. தேக்கு மரக்கதவு மெல்ல தன்னைத்தானே மூடிக் கொண்டதை பார்த்த மதன் செய்வதறியாமல் நின்றான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று பாடியது மீண்டும். ஸ்தம்பித்து நின்ற மதனின் கைகளில் இருந்து மொபைலை வாங்கிய பாலாஜி படித்தான்.

“Dont stop reading this message loudly. Else you will be killed”.

நிறுத்தாமல் சொல்லத் தொடங்கினான் பாலாஜி. 12 நிமிடம் வரை நீடித்தது அவனது ஸ்ரீராமஜெயம்.

போதும்டா. சொல்லிட்டே இருந்தா எப்படி என்றான் மதன்.

ஃப்ரிட்ஜ பார்த்த இல்லை என்ற பாலாஜியின் தலை சிதறு தேங்காயைப் போல வெடித்தது. எதிரில் இருந்த மதனின் முகத்தில் சதைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. பாலாஜியின் ஒரு கண் மட்டும் மொபைலோடு ஒட்டியிருந்தது. இன்னொரு கண் டிவியின் மேல் இருந்தது. தலையில்லாத உடல் மட்டும் நின்றபடியே இருந்தது. கத்த முயற்சித்த மதனால் வெறும் காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது. முண்டத்தை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினான் மதன். எதுவோ அவனை இழுப்பது போல் இருந்தது. அசுர வேகத்தில் தள்ளிவிட்டு மாடிப்படியில் கால் வைத்த போது மீண்டும் அந்தப் பாடல்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

விட்டு விட்டு எரிந்த மொபைலின் மேலிருந்த கண் மதனுக்கு என்னவோ செய்தது. மொபைலை எடுக்காமல் மாடிக்கு ஓட முடிவெடுத்து இரண்டாம் படியில் காலடி வைத்தான். ஃப்ரிட்ஜ் வெடித்தது போல நிசப்தமாக எஞ்சியிருந்த படிகள் அவன் கண் முன்னே சரிந்து விழுந்தது. எல்லாக் கதவுகளும் திறக்க முடியாவண்ணம் மூடியிருக்க அப்படியே சுவரில் சாய்ந்து அழுதான் மதன்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வேகமாக இடிபாடுகளினிடையே சிக்கியிருந்த மொபைலைத் தேடி எடுத்தான் மதன்.

cut your fingers to retain your hand”

ஏதோ ஒரு வேகத்தில் கத்தியை எடுத்தவன் வெட்ட முடியாமல் திகைத்தான். நொடிகள் நிமிடங்களாயின. மீண்டும் மொபைல் ஒலித்தது

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வலது கையில் கத்தியோடு இடதுகையால் எடுத்தான். டமால்… மொபைல் வெடித்துச் சிதற, மதனின் இடது கை சில அடிகள் தள்ளி தனியே பறந்துக் கொண்டிருந்தது. வலி தாங்காமல் அலறினான் மதன். மொபைல் வெடித்ததில் அடுத்த கட்டளை எப்படி வருமென்று பயந்தான். வலியோடும், ஒரே ஒருகையோடும் அங்குமிங்கும் ஓடியவன் மயங்கி விழுந்தான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

கண் விழித்த மதனின் பதட்டம் குறையவேயில்லை. மொபைலை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஃபோன் அடிக்குது இல்ல. எடேண்டா என்ற குரலும், எடுக்க வந்த பாலாஜியின் கையையும் பார்த்த மதனுக்கு எதுவும் புரியவில்லை.
[
Back to top Go down
 
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நானும் கவிதை எழுதுறேன்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
SPECIAL ARTICLES, POEMS & STORY
 :: கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}
-
Jump to: