Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தமிழ் வானம்
உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1998 இல் வெளிவந்த இப்படம் 11-ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபெற்று முடிவில் 5-விருதுகளை (Best Cinematography, Best Sound, Best Sound Editing, Best Editing and Best Director) தட்டி சென்ற மிக பெரிய வெற்றி படம். இரண்டாம் உலக போரில் அமெரிகர்களுக்கும் ஜெர்மனியர்களுக்கும் ஒமஹா கடற்கரையில் (Omaha beachhead assault June 6, 1944) நடந்த தாக்குதலை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திய மிக சிறந்த திரைப்படம். முதல் 30-நிமிடங்கள் பார்த்தாலே போதும் விருதுகள் வாங்கியதற்கான அணைத்து காரணங்களும் உணரலாம்.
ஒரு வயதானவர் குடும்பத்துடன் கல்லறை தோட்டத்திற்கு செல்வதுபோலவும் ஒரு சிலுவையின் முன்னால் அப்படியே மண்டியிட்டு கதறி அழுவது போல ஆரம்பித்து காட்சியை அங்கேயே நிறுத்தி விட்டு அடுத்த காட்சி அதிகாலை June 6 1944-இல் ஒமஹா கடற்கரையில் தொடங்குகிறது.
அமெரிக்க வீரர்கள் படகுகளில் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து கடற்கரையை நேக்கி முன்னேறுகிறார்கள் படகுகின் கதவுகள் திறந்ததுதான் மிச்சம் ஜேர்மனி படையின் பதுங்கு குழி வீரர்களினாலும், இயந்திர துப்பகியினாலும், கனரக ஆயுதங்கள் மூலமாகவும் சின்னபினமகிரர்கள். ஜேர்மனியினர் கடற்கரை மேலே குன்றுகளில் இருந்து நடத்தும் தாக்குதலில் கடற்கரையிலிருந்து செல்லும் அமெரிக்க வீரர்களால் சமாளிக்க முடியாமல் பெரும்பாலானோர் இறந்து விடுகின்றனர்.
இதில் முதலில் இறங்கிய ஒரு Captain (John H. Miller கதையின் நாயகன்) மற்றும் எஞ்சிய வீரர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து பல போர் நுணுக்கங்களாலும் மெதுவாக முன்னேறி ஜெர்மனி வீரர்களை ஒடுக்குகின்றனர்.. இதற்கிடையில் அமெரிக்காவில் General George C. Marshall-க்கு ஒரு தகவல் வருகிறது, அது "ரியான் குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரர்களும் போர்முனையில் இறந்துவிட்டதாக கருதப்பட்டது, அனால் அவர்களது தாயாருக்கு ஒரே நாளில் 3-வருடைய இறந்த தகவல் மட்டுமே கிடைக்கிறது". பின்பு தான் சகோதரர்களில் Private James Francis Ryan என்பவர் மட்டும் வேறொரு ரெஜிமேண்டில் ஒமஹா கடற்கரை ஒட்டிய நோர்மண்டி (Normandy) பகுதியில் இருபதாக அறிகிறார் Marshall.. அவர்கள் குடும்பதிற்காக ஒருவராவது வேண்டும் என்று உடனே Private Ryan யை கண்டுபிடித்து வீட்டுக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார்.
அந்த பொறுப்பு Captain John H. Miller ரிடம் கொடுக்கபடுகிறது. அவர் ஆறு வீரர்களை கொண்ட அணியினை உருவாக்கி தேடுதலை தொடங்குகிறார். வழியில் ஒரு சிறிய ஜெர்மனி படையை அழிக்கிறார் பின்பு பல இடர்பாடுகளை சமாளித்து கடைசியாக ரமேள்ளே (Ramelle) என்ற இடத்தை அடைகிறார் அங்கே தான் Private Ryan மற்றும் இருவரை சந்திக்கிறார். சகோதரர்கள் இறந்த செய்தியை தெரிவித்து உடனே வீட்டிற்கு கிளம்ப சொல்கிறார் Miller. அனால் Private Ryan மறுத்துவிட்டு அந்த ரமேள்ளே (Ramelle) நகரத்தை ஜெர்மனிவீரர்கள் கைப்பற்ற விடாமல் பாதுகாக்க செல்கிறார். உடனே miller-உம் தனது வீர்களுடன் நகரை காப்பாற்ற முயல்கிறார். இந்த இறுதிகட்ட சண்டையில் தன்னிடம் உள்ள 20-கும் குறைவான வீரர்களை வைத்துகொண்டு 50-கும் மேற்பட்ட வீரர்கள், இரண்டு பீரங்கி, மற்றும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஜெர்மனிபடையை எதிர்கொள்கிறார். பல்வேறு யுக்திகளை கையாண்டு படையை திணறடிக்கிறார். முடிவில் வேறு அமெரிக்க படையும் உதவிக்கு வந்து பீரங்கிகளை அழிக்கிறது. குண்டடி பட்டு Miller இறந்து விடுகிறார் முடிவில் Private Ryan சேர்த்து முவர் மட்டுமே உயிரோடு இருகிறார்கள்.. கதையின் ஆரம்பித்தில் அழுத வயதானவர் தான் Private Ryan .... Miller கல்லறையில்..
படத்தின் முதல் பாத்து நிமிடங்கள் இதில் காணுங்கள் நிச்சயம் பிடிக்கும்