Social bookmarking |
Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website |
|
| | அயோத்தி வழக்கில் தீர்ப்பு - Ayodhya verdict | |
| | Author | Message |
---|
Admin Admin
Posts : 54 Join date : 2010-09-21
| Subject: அயோத்தி வழக்கில் தீர்ப்பு - Ayodhya verdict Wed Sep 22, 2010 8:25 pm | |
| அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகிறது. இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது, தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோவில்கள்- மசூதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வருகிற 23ஆம் தேதி நள்ளிரவில் இருந்தே பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இருந்தாலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கு தீர்ப்பை தள்ளி வைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இன்று மதியம் 2 மணிக்கு இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதிகள் அல்ட்மாஸ் கபீர் மப்ற்றும் ஏ.கே. பட்நாயக் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இம்மனுவை விசாரிப்பதற்கு உரிய அமர்வு தாங்கள் அல்ல என்றும், எனவே வேறு அமர்வில் இம்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி விசாரணையை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
அநேகமாக நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. | |
| | | | அயோத்தி வழக்கில் தீர்ப்பு - Ayodhya verdict | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |