Social bookmarking |
Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website |
|
| | திரைவிமர்சனம்-பாஸ் (எ) பாஸ்கரன் | |
| | Author | Message |
---|
ooviyaa selvaraj
Posts : 47 Join date : 2010-09-21
| Subject: திரைவிமர்சனம்-பாஸ் (எ) பாஸ்கரன் Thu Sep 23, 2010 11:14 am | |
| பாஸ் (எ) பாஸ்கரன் என்கிற படம் 'சிவா மனசுல சக்தி' படம் பெற்ற வெற்றி தந்த நம்பிக்கையின் தொடர்ச்சி.
ஐந்து வருடங்களாக இருக்கும் நிலுவை தேர்வில் எப்படியும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கொலை வெறியில் தேர்வுக்கு முன் தினம் இரவெல்லாம் முயன்று 'துண்டு சீட்டு' தயாரிக்கும் நல்லவன் பாஸ்கரன். அனுபவம் கற்றுத் தந்த பாடம் காரணமாக, எடுத்துச் செல்லும் துண்டு சீட்டுகளுக்கு அட்டவணை தயாரிக்கிறான். பேருந்து நிறுத்தத்தில் ஓர் அழகான (!?) பெண்ணை பார்க்க நேரிட, அப்பேருந்தில் ஏறுகிறான். காற்றில் பறந்து விடும் அட்டவணையை எடுத்து கொடுக்கும் பெண்ணிடம், அட்டவணை எதற்கு என்று சொல்கிறான். திரைக்கதையின் போக்கு காரணமாக, அந்த பெண்ணே தேர்வு அறைக்கு தேர்வாளராக வந்து பாஸ்கரன் வைத்திருக்கும் துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்கிறாள்.
அண்ணியாக வருபவரின் தங்கையாய் மீண்டும் பேருந்து மற்றும் தேர்வறையில் பார்த்த அதே பெண்ணை சந்திக்க வைக்கிறது திரைக்கதை. பொறுத்தது போதுமென பாஸ்கரன் அப்பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுகிறான். வேலை வெட்டி இல்லாதவனுக்கு எப்படி பெண் தருவது என அண்ணி கேள்வி எழுப்ப, ஆறு மாதத்தில் சம்பாதித்து தங்கையின் திருமணத்தை நடத்தி காட்டுவதாக சூளுரைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் பாஸ்கரன். அவன் மீண்டும் வீட்டிற்கு போனானா, தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்தானா, காதலியின் கரம் பற்றினானா என்ற கேள்விகளுக்கு பதிலுடன் சுபமாய் நிறைவுறுகிறது படம்.
சந்தானம். நல்லத்தம்பி என்ற பாத்திரத்தில் நாயகனுக்கு நண்பனாக படத்தின் மிக முக்கிய பாத்திரத்தில் கலக்கியுள்ளார். தல தளபதி என்ற சலூன் கடை அதிபராக களமிறங்கி இருக்கும் சந்தானம் மட்டுமே திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சகலத்திற்கும் நம்பிக்கையாக இருக்கக் கூடும். நம்பிக்கையை கட்டி காப்பாற்றியுள்ளார் நல்லத்தம்பி.
ஆர்யா நாயகனாக. நயன் தாரா நாயகியாக.
கெளரவ வேடத்தில் ஜீவா. 'சிவா மனசுல சக்தி' படத்தில் கெளரவ தோற்றத்தில் தோன்றிய ஆர்யாவை விட இவருக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகமாய் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்கம் ராஜேஷ். நாட்டிற்கு அறிவுரை வழங்கவில்லை. சமூக அவலங்களை தோலுரிக்கவில்லை. குத்துப்பாட்டு இல்லை மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லை. முழு நீள நகைச்சுவை அல்லது மொக்கை மட்டுமே பிரதானமாக கொண்டு வசனங்கள் மூலமாகவே படத்தினை நகர்த்துகிறார். ஒளி மட்டும் ஒலிகளின் பதிவு தேவையான அளவு.
'ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்' என்ற முந்தைய படத்திற்கு விளம்பரம் அளித்து கவர்ந்தது போல, நண்பேன்டா என்ற ஒற்றை சொல்லால் ரசிகர்களுக்கு தூண்டில் போடுகின்றனர். | |
| | | | திரைவிமர்சனம்-பாஸ் (எ) பாஸ்கரன் | |
|
Similar topics | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |