Social bookmarking |
Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website |
|
| | குழந்தைக்கவிதைகள் இரண்டு | |
| | Author | Message |
---|
vasu Admin
Posts : 58 Join date : 2010-09-21 Age : 40 Location : singapore
| Subject: குழந்தைக்கவிதைகள் இரண்டு Tue Sep 28, 2010 5:41 pm | |
| அப்பாவும் அம்மாவும் தராத அரவணைப்பை பொம்மைக்கு தந்தபடி உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை. கனவில் தோன்றிய கடவுள்கள் அச்சிறு குழந்தையின் அரவணைப்பை வரமாய் கேட்டனர். வரிசையில் நின்றிருந்த கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை தந்துவிட்டு பொம்மையை இறுக்கி அணைத்துக்கொண்டதது. பொம்மையாதலின் வழிமுறைகள் அறியாமல் விழித்தபடிநின்றனர் கடவுள்கள் கதை சொல்ல நச்சரித்தது குழந்தை. பேய்க்கதை சொல்லத்துவங்கினேன். அனைவரும் உறங்கிவிட்ட ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும் துரத்தி ஓடிவந்தன என்று தொடங்கினேன். பேய்க்குத்தான் கால்கள் இல்லையே பின்னெப்படி ஓடிவரும் என்றது குழந்தை. உறங்கிவிட்ட பாவனையில் கண்மூடிக்கிடந்தேன் நான்.
| |
| | | | குழந்தைக்கவிதைகள் இரண்டு | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |