Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தமிழ் வானம்
உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
Subject: மனித வைரஸ் வெற்றிகரமாக குளோன் செய்யப்பட்டது Sat Sep 25, 2010 12:12 am
உயிரைப் பலிவாங்கும் பல நோய்களுக்குத் தீர்வுகாணுவதில் முதல் படியாக மனித உடலில் உள்ள வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர்.
கொடிய நோய்களான எய்ட்ஸ்/எச்.ஐ.வி., பிறவிமுதலே ஏற்படும் தீராத நோய்கள், உடற்குறைகள் ஆகியவற்றிற்கு காரணமாக விளங்கும் ஹியூமன் சைட்டோமெகலோவைரஸ் (HCMV) என்பதைத்தான் விஞ்ஞானிகள் தற்போது வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர்.
மனித உடலுக்கு வெளியே இந்த வைரஸை பிரதி எடுக்கமுடியவில்லை. கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் தலைவர் டாக்டர் ரிச்சர்ட் ஸ்டாண்டன், இது பற்றி தெரிவிக்கையில், எச்.சி.எம்.வி. என்ற இந்த வைரஸ்தான் மனிதனை அதிகம் பாதிக்கும் வைரஸ் ஆகும். இதனால் இந்த வைரஸை அப்படியே அல்லது அது போன்றே குளோன் செய்வது கடினம்.
ஆனால் தற்போது குளோனிங் செய்தபோதுதான் தெரிந்தது மனித உடலுக்கு வெளியே அந்த வைரஸ் தடுமாறுவதைக் காண முடிந்தது. என்று கூறினார்.
இந்த ஜீன்களை கண்டுபிடித்திருப்பதால் தற்போது செல்களை வளர்த்து அதனுள் மனித உடலில் இருப்பது போலவே இந்த வைரசை வளர்க்க முடிந்துள்ளது.
இதனால் இந்த வைரசுக்கு எதிராக வாக்சைன்கள் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க இயலும் என்று கூறினார் ஸ்டாண்டன்.
இந்த ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குளோனிங் வைரஸ் உலகம் முழுதும் உள்ள பரிசோதனை மையங்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகச் சுகாதார மையமும் இந்த குளோனிங்கை பரிசோதனை செய்து வருகிறது.
முதல் முறையாக மனித உடலில் இருப்பது போன்ற ஒரு வைரஸின் பிரதியை குளோனிங் செய்து உருவாக்க முடிந்துள்ளது. இது புதிய சிகிச்சைகளுக்கான ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும்.
இதில் முக்கியமான உடைப்பு என்னவெனில் இந்த வைரஸை அவ்வளவு எளிதில் பிரதி எடுத்து விடமுடியாது, அதனுள் இருக்கும் சில கூறுகள் இந்த நடவடிக்கையை தோல்வியடையச் செய்யும் என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது இதனை சாதித்துள்ளனர். இது அடுத்தகட்டத்திற்கு முன்னேறினால் உண்மையில் பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து கிடைத்து விடும் என்றே நம்பலாம்.